என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அமைதியாக நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி
- அமைதியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது
- பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்
பெரம்பலுார்:
பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாக்களை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெரம்பலூரில் பதசஞ்சலன் சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற இந்த பேரணியை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு பா.ஜ.க.வினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 250க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு அணிவகுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்