search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதங்கள்"

    • 7 வாலிபர்களை போலீசார் பிடித்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    • 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு.

    வல்லம்:

    தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின்.

    இவருடைய மகன் பிரின்ஸ்லாரா என்ற சின்னா(வயது28).

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சம்பவத்தன்று திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாதாகோட்டையில் இருந்து சின்னா மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதனை அறிந்த ஒரு மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் சின்னாவை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    சின்னாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் வல்லம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னா உயிரிழந்தார்.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கொலையாளிகள் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வளாக பகுதியில் மறைந்திருந்து அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 7 பேரையும் போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), ராஜேஷ்(23), புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய்(26), ஒரத்தநாட்டை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி(19), கோரிகுளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), தஞ்சை விளார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதிஸ்வரன்( 28) என்றும் முன்விரோதம் காரணமாக இவர்கள் 7 பேரும் சேர்ந்து சின்னாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    பின்னர் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொலை நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டு தெரிவித்தார்.

    • அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்தனர்.
    • பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கிருட்டி என்கிற சாந்தகுமார் (வயது19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.

    அப்போது பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமாரை விசாரித்ததில் வாகன திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    பட்டுக்கோட்டை கிரைம் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கொள்ளையடிக்க பதுங்கியிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில மாதங்களாக நகை, பணம் பறிப்பு, கொள்ளை, கொலை போன்றவை அதிக அளவில் நடந்து வருகிறது. குற்றங்களில் பெரும்பாலும் சிறுவர்கள் ஈடுபடுவது கவலைக்குரியதாக உள்ளது.

    மதுைர நகரில் குற்றங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு ள்ளார். இதையடுத்து சமூக விரோதசெயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படைபோலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ேராந்து சுற்றி வந்த னர். எல்லீஸ் நகர் மேம்பால கீழ்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுங்கி இருந்த 10 பேர் திடீரென போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து உஷாரான போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். அவர்களை பரிசோதித்தபோது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்வைத்திருப்பது தெரியவந்தது.

    5 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள், மேலவாசல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ராஜா மகன் ஜெயராஜ் பாலா (வயது 23), திடீர் நகர் சந்தனவேல் மகன் மண்ட மகேந்திரன் (18), ஹீரா நகர் சுந்தரம் மகன் பேய் மணிகண்டன் (19), சுப்ரமணியன் மகன் பெருமாள் (19), மேலவாசல் பேச்சிமுத்து (39) என்பது தெரிய வந்தது. இவர்கள் எல்லீஸ் நகர், அரசரடி, மகபூப்பாளையம், பை-பாஸ் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் பேலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய மேலும் 5 பேரை ஆரப்பாளையம் வைைக தென்கரை பகுதியில் தனிப்படை போலீசார் சுற்ற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் திடீர் நகர் தக்காளி பாபு (42), வண்டியூர், பாண்டியன் நகர், திலகர் தெரு முருகன் மகன் அஞ்சான் சிவா (20), திடீர் நகர் காளிதாஸ் என்ற பல்லு காளி (28), மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜோ திருமலை (25), ஹீரா நகர் சக்தி மகன் ஊமையன் செல்வராஜ் (19). என்பது தெரியவந்தது. இவர்களும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை சேர்த்து ெமாத்தம் 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×