search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேஷன் கஞ்சா வேட்டை"

    • கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்தவர்களான காளை அவரது மனைவி பெருமாயி, அவரது உறவினர் அய்யர் ஆகியோர் தொடர்ந்து கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சொந்தமான 8 வீட்டுமனைகள், பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள் என ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராசார்க் பொறுப்பேற்ற பின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 651 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல 159 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் ரூ.11 கோடிக்கு மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 7 நாட்களில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருவல்லிக்கேணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகமான முறையில் வந்த ஆட்டோவை பிடித்து சோதனை செய்தனர்.
    • ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை:

    கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை காவல் துறையினர் இணைந்து 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையை சென்னையில் நேற்று காலை தொடங்கினர். 2 நாட்கள் தொடர்ந்து ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர்மட்ட பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டது. நேற்று மாலை வரையில் 6 பேரை போலீஸ் குழுவினர் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சென்னையில் ஊடுருவ முயன்ற 12 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் மொத்தம் 18 பேர் பிடிபட்டுள்ளனர்.

    இதற்கிடையே திருவல்லிக்கேணி போலீசார் அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகமான முறையில் வந்த ஆட்டோவை பிடித்து சோதனை செய்தனர்.

    அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் சோரோ தாலுக்கா ராமகிருஷ்ணன் (29), ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கா மண்டல்(20), ஜக் மோகன் மண்டல்(28), அர்ஜூன் மண்டல் (20) என தெரிய வந்தது.

    இவர்கள் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து அங்கிருந்து இறங்கி ஆட்டோவின் மூலம் கஞ்சா கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ×