search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரிகள்"

    • போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கஞ்சாபொட்ட லங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார்,பண்ருட்டி,புதுப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் கள்,பயிற்சி சப்-இன்ஸ்பெக்ட ர்மற்றும்போலீசார் நேற்று தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் நடுசாத்திப்பட்டு நங்கை அம்மன் கோயில் தெரு ரகு(18)ஆ.நத்தம் பெருமாள் கோவில் தெருஅப்பு ( 20 ) கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சாபொட்ட லங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்தவர்களான காளை அவரது மனைவி பெருமாயி, அவரது உறவினர் அய்யர் ஆகியோர் தொடர்ந்து கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சொந்தமான 8 வீட்டுமனைகள், பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள் என ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராசார்க் பொறுப்பேற்ற பின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 651 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல 159 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் ரூ.11 கோடிக்கு மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 7 நாட்களில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் ரோந்து பணியில் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீத்தாங்கரை ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் (வயது 30), நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (24), கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (21) இதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் (21) என தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பிரித்துக் கொண்டிருந்தனர். . இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    • திட்டக்குடி அருகே கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கினர்.
    • அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே கோழியூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கோழியூர் கால்வாய் பாலம் அருகே பைக்கில் சென்ற நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இரும்புக்கம்பியை காட்டி மிரட்டியவாறு போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட் தூக்கியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை தொடர்ந்து திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கோழியூரை சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தராஜா (20) மற்றும் 19 வயது சிறுவன் என தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு முனுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளில் போலீ சார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களது சொத்துக்கள் மட்டுமின்றி உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்தில் 322 கிலோ கஞ்சா, கார், லாரி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.53 லட்சத்து 29 ஆயிரத்து 881 ஆகும்.

    சேடப்பட்டி பகுதியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.29 லட்சத்து 31 ஆயிரத்து 671 ஆகும். மேலும் இதே இடத்தில் உள்ள மற்றொரு பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    ஒத்தகடை போலீஸ் சரகத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.5.5 கோடி ஆகும். நாகமலை புதுக்கோட்டையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 450 ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 559.80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரம் செய்தவர்களின் ரூ.8 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 2 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவுக்கு சென்று அங்கு கஞ்சா சாகுபடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மூலம் கஞ்சா மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே ஆந்திராவில் பதுங்கி இருந்து கஞ்சா சாகுபடியில் ஈடுபடும் குற்ற வாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    மேலும் மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் மொத்த வியாபாரி கள், சில்லரை வியா பாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×