search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே போலீசாரை தாக்கிய  கஞ்சா வியாபாரிகள்
    X

    கைதான கஞ்சா வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    திட்டக்குடி அருகே போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்

    • திட்டக்குடி அருகே கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கினர்.
    • அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே கோழியூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கோழியூர் கால்வாய் பாலம் அருகே பைக்கில் சென்ற நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இரும்புக்கம்பியை காட்டி மிரட்டியவாறு போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட் தூக்கியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை தொடர்ந்து திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கோழியூரை சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தராஜா (20) மற்றும் 19 வயது சிறுவன் என தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு முனுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×