search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைனில் மோசடி"

    • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
    • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

    அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

    பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
    • குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி நாகப்பன் மெயின் ரோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    அதை உண்மை என நம்பிய பிரபு, குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்த்தபோது, சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறினர்.

    இதையடுத்து பிரபு, மேற்கண்ட நபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,01959 செலுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வேலையும் தராததால் சந்தேகம் அடைந்த பிரபு, மேற்கண்ட குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த பிரபு, இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×