search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மி களஞ்சியம்"

    • பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்.
    • இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.

    நாகலாபுரம் வேதநாராயணன் பெருமாள் ஆலயத்தில் ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    அன்று மூலவர் மச்ச அவதார பெருமாளுக்கு செய்யப்படும் பூஜைகளை பார்த்து தரிசிக்க நீண்ட தூரத்தில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தலத்தின் ஏகாதசி பூஜை சிறப்பு பெற்றுள்ளது.

    எனவே ஏகாதசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏகாதசியை விட உயர்ந்த விரதம் வேறு ஏதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. எந்த நிலையிலும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.

    அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள். இது சுக்ல பட்சம் எனப்படும்.

    பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்.

    இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.

    இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளில் வரும் திதி ஏகாதசி திதி.

    ஏகம்+தசம்= அதாவது 1+10=11 என்பதுதான் ஏகாதசி திதி.

    இந்த பதினொன்றாம் திதிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு.

    அவ்வாறு ஏகாதசி திதிக்கு உரிய தேவதை தர்மம் ஆகும்.

    அதனால் இந்த திதியை 'தர்மதிதி' என்றும் கூறுவது உண்டு.

    எனவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை ஒருவர் தவறாது பின்பற்றினால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும்.

    அதனால் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவார்கள்.

    கர்ம மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, மனம் 1 ஆகிய இந்தப் பதினொன்றாலும் செய்யப்படும் தீவினைகள், இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் அழியும்.

    ஏற்கனவே செய்த தீவினைகள் அழிந்துவிடும்.

    பெருமாளை வணங்குகிறோம். இனி தீவினைகள் செய்ய மாட்டோம் என்பதை அவ்வப்போது மறந்துவிடாமல் உறுதியுடன் இருக்க ஏகாதசி விரதம் முக்கியமானதாகும்.

    ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.

    ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

    எனவே சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகள் வரும்.

    இந்த ஏகாதசிகளின் வரிசை மார்கழி மாதம் தேய்பிறை பகுதியில் ஆரம்பித்து அடுத்து வரும் கார்த்திகை மாத வளர்பிறைப் பகுதியில் முடிவடைகிறது.

    • அந்த இரு உருவங்களும் கருவறைக்கு காவலாக வீற்றிருக்கும் துவார பாலகர்கள் ஆவார்கள்.
    • பெரும்பாலும் கருவறை வாசலில் மட்டுமே துவார பாலகர்களை பார்க்க முடியும்.

    பொதுவாக பழமையான ஆலயங்களுக்கு செல்லும் போது கருவறை நுழைவு வாயிலில் இருபுறமும் காணப்படும் கம்பீரமான உருவங்களை பார்த்திருப்பீர்கள்.

    அந்த இரு உருவங்களும் கருவறைக்கு காவலாக வீற்றிருக்கும் துவார பாலகர்கள் ஆவார்கள்.

    பெரும்பாலும் கருவறை வாசலில் மட்டுமே துவார பாலகர்களை பார்க்க முடியும்.

    விதி விலக்காக சில ஆலயங்களில் கருவறைக்கு முன்புள்ள இரண்டு மண்டப நுழைவு வாயிலிலும் துவார பாலகர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

    ஆனால் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் மிக மிக வித்தியாசமாக கருவறை முன்பு உள்ள 4 மண்டப 4 நுழைவு வாயில்களிலும் துவார பாலகர்கள் காணப்படுகிறார்கள்.

    அந்த வகையில் மொத்தம் 8 துவார பாலகர்களை இந்த ஆலயத்தில் தரிசனம் செய்யலாம்.

    இந்த ஆலயத்துக்குள் கருவறையை நோக்கி நுழைந்ததும் முதலில் நாகராஜ கணேசன், விஷ்ணு, துர்க்கை ஆகிய இரு துவார பாலகர்களும் காணப்படுகிறார்கள்.

    அடுத்து ஜெயா, விஜயா என்ற துவார பாலகர்கள் உள்ளனர்.

    3வது வாயலில் விக்னசா, தாபசா என்ற இரு துவார பாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

    4வது நுழைவு வாயிலில் மனிகா மற்றும் சந்தியா என்ற துவார பாலகர்கள் இருக்கிறார்கள்.

    மிகவும் வித்தியாசமான இந்த அமைப்பை நாகலாபுரம் ஆலயத்துக்குள் செல்லும் போது கண்டுவர தவறாதீர்கள்.

    • பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்டம் 7 வாசல்களை கொண்டது.
    • அகழியுடன் காணப்படும் அந்த பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் சிற்ப கலையை கண்டு ரசிக்கலாம்.

    பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்டம் 7 வாசல்களை கொண்டது.

    அதை சப்த துவாரம் என்று சொல்வார்கள். அதே அமைப்பு நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்திலும் அமைந்துள்ளது.

    இந்த தலத்தின் கருவறைக்கு முன்பு 7 நுழைவாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலாக கடந்து சென்று பெருமாளை தரிசித்தால் வைகுண்டத்துக்கு சென்றது போன்ற பலனை பெற முடியும் என்பது ஐதீகம்.

    அதுபோன்று இந்த தலம் பஞ்ச பிரகாரங்களை கொண்டது. அதாவது 5 பிரகாரங்கள் இந்த தலத்தில் அமைந்துள்ளன.

    கருவறையை சுற்றி முதல் பிரகாரம் அமைந்துள்ளது.

    அகழியுடன் காணப்படும் அந்த பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் சிற்ப கலையை கண்டு ரசிக்கலாம்.

    விஜயநகர பேரரசின் கட்டிடக்கலை நுணுக்கங்களை அங்குள்ள ஒவ்வொரு தூண்களிலும் பக்தர்கள் பார்க்க முடியும்.

    முதல் பிரகாரத்தை சுற்றி வரும் போது விஷ்ணு, துர்க்கை, பிரம்மா, விஷ்வசேனா ஆகியோரது உருவங்களை தரிசிக்கலாம்.

    கருவறைக்கு நேர் பின்புறம் லட்சுமி வராக சுவாமி, வேணுகோபால சுவாமி, லட்சுமி நாராயண சுவாமி, ஹயக்கிரீவர் சுவாமி ஆகிய 4 பேரின் பிரம்மாண்ட விக்கிரகங்கள் வரிசையாக இருக்கின்றன.

    கருவறை பின்புறம் பொதுவாக பெருமாளின் அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த தலத்தில் லட்சுமி பூவராக சுவாமி இடம் பெற்றுள்ளார்.

    கருவறையின் அடுத்த பகுதியில் வீணா தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரது விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    2வது பிரகாரம் மிக அகன்ற வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த கருவறையின் ஒரு பகுதியில் பக்த ஆஞ்சநேயரும், மற்றொரு பகுதியில் வேதவல்லி தாயாரும் இருக்கிறார்கள்.

    ராமர், லட்சுமணர், வீர ஆஞ்சநேயர் ஆகியோரையும் அந்த பிரகாரத்தில் தரிசிக்கலாம்.

    3வது பிரகாரம் நந்தவனம். 4வது பிரகாரம் மாடவீதியாக உள்ளது. 5வது பிரகாரம் கிராமத்தை உள்ளடக்கியது.

    • நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    • 12 ராசிக்காரர்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தலம் மிக உகந்த தலமாக கருதப்படுகிறது.

    1. நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    2.நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு செல்பவர்களை வரவேற்கும் வகையில் திருப்பதி சாலையில் இருந்து பிரியும் பகுதியில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு கட்டி உள்ளனர். அந்த வழியாக சென்றால் மிக எளிதாக ஆலயத்துக்குள் செல்லலாம்.

    3. வேதநாராயண சுவாமி ஆலயத்தில் கருவறை சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகளும், சிற்பங்களும் நிறைந்து உள்ளன.

    4. இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கோட்டைக்கு மத்தியில் கட்டப்பட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த கோட்டையின் சில பகுதிகள் இப்போதும் நாகலாபுரம் ஊரில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

    5. கருவறையை சுற்றி மிகப்பெரிய அகழி அமைத்து உள்ளனர். அந்த அகழி பகுதியிலும் ஏராளமான அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

    6. திருப்பதி ஆலயத்தில் நடப்பது போன்றே இந்த தலத்திலும் அனைத்து வகை பூஜைகளும் பெருமாளுக்கு நடத்தப்படுகின்றன.

    7. இந்த தலத்தில் திருப்பதியை போன்றே தினமும் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

    8. ஆகம விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. இதனால் நவக்கிரகங்களில் எந்த கிரகத்தில் தோஷம் இருந்தாலும் இந்த தலத்தில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

    9. இந்த ஆலயத்தில் பல தடவை அகழாய்வு செய்த போது அரிய சிலைகள் கிடைத்து உள்ளன. எனவே இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய மிக பழமையான ஆலயம் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

    10. வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு சொந்தமாக ஏராளமான நிலம் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக பல நிலங்கள் கை நழுவி விட்டன.

    11. 1967ம் ஆண்டு இந்த ஆலயத்தை அரசு கையகப்படுத்தி நடத்தி வருகிறது.

    12. இந்த ஆலயத்தின் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் 99 சதவீதம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளாக அமைந்துள்ளன.

    13. வைகுண்ட ஏகாதசி, தை மாத பிறப்பு, ரதசப்தமி ஆகியவை இந்த தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். சமீப காலமாக தெலுங்கு வருடப்பிறப்பும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    14. திருப்பதி ஆலயத்தின் நேரடி கட்டுப்பாட்டில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் இயங்கி வருகிறது.

    15. சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், சுருட்டப்பள்ளியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    16. சென்னையில் இருந்து செல்பவர்கள் இந்த ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும் போது சுருட்டப்பள்ளி, பெரியபாளையம், சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் ஆகிய ஆலயங்களில் தரிசித்துவிட்டு வரலாம்.

    17. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷங்களுக்கு இந்த தலம் மிகவும் சிறந்த பரிகார தலமாகும்.

    18. 12 ராசிக்காரர்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தலம் மிக உகந்த தலமாக கருதப்படுகிறது.

    19. இந்த ஆலயத்து பெருமாளுக்கு மத்ஸ்ய நாராயண பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு.

    20. நாகலாபுரத்தில் இருந்து திருப்பதி சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து செல்பவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு கொண்டால் இரு ஆலயங்களிலும் தரிசனம் செய்து விட்டு வரலாம்.

    21. நாகலாபுரத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. நேரமிருப்பவர்கள் அங்கும் சென்று வரும் வகையில் யாத்திரையை அமைத்துக்கொள்ளலாம்.

    22. இந்த தலத்தில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமியை மையமாக கொண்டு நடக்கும் இந்த திருவிழா 9 நாட்கள் நடத்தப்படும்.

    23. மீன் அவதாரம் எடுத்ததால் இந்த தலத்தில் மச்ச ஜெயந்தி மிக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும்.

    24. வைகாசி மாதம் இந்த தலத்தில் நடக்கும் புஷ்ப யாகம் மிக பிரச்சித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த புஷ்ப யாகத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    25. கார்த்திகை மாதம் இந்த தலத்தில் பவித்ர உற்சவம் நடைபெறும்.

    ×