search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    8 துவார பாலகர்கள்
    X

    8 துவார பாலகர்கள்

    • அந்த இரு உருவங்களும் கருவறைக்கு காவலாக வீற்றிருக்கும் துவார பாலகர்கள் ஆவார்கள்.
    • பெரும்பாலும் கருவறை வாசலில் மட்டுமே துவார பாலகர்களை பார்க்க முடியும்.

    பொதுவாக பழமையான ஆலயங்களுக்கு செல்லும் போது கருவறை நுழைவு வாயிலில் இருபுறமும் காணப்படும் கம்பீரமான உருவங்களை பார்த்திருப்பீர்கள்.

    அந்த இரு உருவங்களும் கருவறைக்கு காவலாக வீற்றிருக்கும் துவார பாலகர்கள் ஆவார்கள்.

    பெரும்பாலும் கருவறை வாசலில் மட்டுமே துவார பாலகர்களை பார்க்க முடியும்.

    விதி விலக்காக சில ஆலயங்களில் கருவறைக்கு முன்புள்ள இரண்டு மண்டப நுழைவு வாயிலிலும் துவார பாலகர்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

    ஆனால் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் மிக மிக வித்தியாசமாக கருவறை முன்பு உள்ள 4 மண்டப 4 நுழைவு வாயில்களிலும் துவார பாலகர்கள் காணப்படுகிறார்கள்.

    அந்த வகையில் மொத்தம் 8 துவார பாலகர்களை இந்த ஆலயத்தில் தரிசனம் செய்யலாம்.

    இந்த ஆலயத்துக்குள் கருவறையை நோக்கி நுழைந்ததும் முதலில் நாகராஜ கணேசன், விஷ்ணு, துர்க்கை ஆகிய இரு துவார பாலகர்களும் காணப்படுகிறார்கள்.

    அடுத்து ஜெயா, விஜயா என்ற துவார பாலகர்கள் உள்ளனர்.

    3வது வாயலில் விக்னசா, தாபசா என்ற இரு துவார பாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

    4வது நுழைவு வாயிலில் மனிகா மற்றும் சந்தியா என்ற துவார பாலகர்கள் இருக்கிறார்கள்.

    மிகவும் வித்தியாசமான இந்த அமைப்பை நாகலாபுரம் ஆலயத்துக்குள் செல்லும் போது கண்டுவர தவறாதீர்கள்.

    Next Story
    ×