search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் போராட்டம்"

    • தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடன் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர்.
    • இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாப்பிடாமல் உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பலர் சோர்வாக காணப்பட்டனர்.

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த வசந்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிதா ஆகிய 2 ஆசிரியைகள் இன்று காலையில் திடீரென மயக்கம் அடைந்தனர்.

    அங்கு தயார் நிலையில் இருந்த ஆரம்புலன்சில் ஏற்றப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் போது, "கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.

    • வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
    • 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

    பாட்னா:

    பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    சென்னை:

    'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி அந்த பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

    ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் தங்களை பணியில் அமர்த்த கோரி பிச்சை எடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 'பாடை' போல் படுத்த படியும் ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

    ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    • 500 உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருப்பத்தூரில் 10 வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையமான மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் வட்ட தலைவர் கே‌ அண்ணாமலை, தலைமை வகித்தார் அனைவரையும் ஆம்பூர் வட்டத் தலைவர் எஸ்.அறிவழகன் வரவேற்றார், கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார், தொடங்கிவைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2004-2006, வரை பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளிலிருந்து பணிவரன்முறை செய்ய வேண்டும், 2022 முதல் வழங்கப்பட வேண்டிய அனைத்து அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம். தேசிங்கு ராஜன்‌, மாவட்டச் செயலாளர் வி. மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர். துக்கன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் எம். சுரேஷ், மாவட்ட இணைச்செயலாளர் மோதிலால், சுப்பிரமணி, உட்பட 500 உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் இறுதியில் வட்டத் தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    ×