search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவானி லீக் கட்சி"

    • வங்காள தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
    • அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    வங்க தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகள் அரசால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை(ஜன.7) தேர்தல் நடைபெறுகிறது

    90 பெண்கள், 79 சிறுபான்மையர் உட்பட 1,970 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆளும் கட்சியான அவானி லீக் கட்சி சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான அவானி லீக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது செயல்பட்டு வரும் அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வங்க தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத புத்த மதம்-இந்து மதம்-கிறிஸ்துவ மதத்தின் ஐக்கிய கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்க தேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி, வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை  நடைபெரும் என தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    ×