search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகு பார்வதி அம்மன் கோவில்"

    • ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு திருவிழா

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரியவர்களா லும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதா யத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதா யத்தினர் மண்டகபடி யாகவும், 8-ம் நாள் அனை த்து சமுதாயம் சார்பில் கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    தேர்த்திருவிழா

    நேற்று 9-ம் நாள் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்க ப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைத் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை நகராட்சி அலுவலகம் அரு கில் வந்தடைந்து. பின்பு அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாத்திற்கு வந்தது.

    இன்று 10-வது நாள் சப்தாவரண நிகழ்ச்சி விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
    • 9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரி யவர்களாலும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதாயத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதாயத்தினர் மண்டகபடியாகவும், 8-ம் நாள் அனைத்து சமுதாயம் சார்பில் கொண்டாடப்பட்டது. நேற்று முளைப்பாரி தீச்சட்டி, ஆயிரம் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். அப்போது தங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூறி அம்மனை மனம் உருகி வணங்கினர்.

    இதனால் அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தினர்.

    9-ம் நாள் திருநாளான இன்று பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சிலம்பாட்டம், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடக்கிறது. அம்மன் ஒய்யாரமான தேரில் எழுந்தருளி பவனி வருகிறார். திருவிழாவை காண திரளான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தேர்த்திருவிழா மட்டும் இன்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி வெள்ளி விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம பெண்கள் கலந்து கொள்கிறார்கள். நாளை (11-ந் தேதி) நிறைவு திருவிழாவாக 10-ம் நாள் மண்டகப்படியாக விஸ்வ பிரம்மா சமுதாயத்தினர்கள் சார்பில் நடக்கிறது.

    ×