search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
    X

    சித்திரை தேரோட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களை படத்தில் காணலாம்.

    சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

    • ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு திருவிழா

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரியவர்களா லும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதா யத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதா யத்தினர் மண்டகபடி யாகவும், 8-ம் நாள் அனை த்து சமுதாயம் சார்பில் கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    தேர்த்திருவிழா

    நேற்று 9-ம் நாள் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்க ப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைத் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை நகராட்சி அலுவலகம் அரு கில் வந்தடைந்து. பின்பு அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாத்திற்கு வந்தது.

    இன்று 10-வது நாள் சப்தாவரண நிகழ்ச்சி விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×