search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலை மோதியது"

    • ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
    • ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்ப ட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    நேற்று மதியம் முதல் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்களில் மக்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இது தவிர சேலம், கோவை, திருப்பூர் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடவடி க்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலை யத்தில் தேவை யில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதேபோல் சில குடிமகன்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதலே ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்ப குடும்பமாக மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம் இன்று பரபரப்பாக காட்சியளி க்கப்பட்டது. மேலும் ஈரோடு போலீஸ் சார்பில் பஸ் நிலையத்தில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ெரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் இருந்தது. பொதுவாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தற்போது தொடர் விடு முறை வருவ தால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    அனைத்து ெரயில்களி லும் முன்பதிவு நிரப்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணிக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் ெரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலர் நின்று கொண்டே பயணித்தனர்.

    ெரயில் நுழைவு பகுதியில் ஈரோடு ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி சமயம் என்பதால் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி யாராவது பட்டாசு கொண்டு செல்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் ெரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகு அவர்களே உள்ள அனுமதிக்கின்றனர்.

    தறி தொழிலாளர்கள், நெசவுத் தொழிலா ளர்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் அவர்கள் அனைவரும் குடும்பமாக இன்று ெரயில்களில் கிளம்பி சென்றனர்.

    இதனால் இன்று ஈரோடு ெரயில் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது.

    • கொடிவேரியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி வருகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையை யொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலையில் நேரத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் வர தொடங்கினர்.

    ஆனால் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணபட்டது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதையொட்டி கொடிவேரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்து கண்காணித்தனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் கொடிவேரி பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×