search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருள் ஆனந்தர் கல்லூரி"

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் விளக்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி கணிதத் துறை, பெங்களூர் கெரிசிம் அகாடமி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கணிதத்தில் கணக்கீட்டு நுட்பங்கள் குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது. கணிதத் துறைத்தலைவர் ராபர்ட் திலிபன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பரசு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் அந்தோனிசாமி வாழ்த்துரை வழங்கினார். பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் சேவியர் அடைக்கலராஜ் விளக்கினார். பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியின் (தன்னாட்சி) கணித பேராசிரியர் கிளமென்ட் ஜோ ஆனந்த், கணக்கீட்டு நுட்பங்களில் உள்ள சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹன்னா கிரேஸ், கணக்கீட்டுக் கணிதத்தில் மென்பொருள் அணுகுமுறைகள் குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். இணை முதல்வர் சுந்தரராஜ் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முடிவில் பேராசிரியர் நிவேதா மார்ட்டின் நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்ப்டடோர் கலந்து கொண்டனர்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா நடக்கிறது.
    • உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா போதை பொருள்களுக்கு எதிரான மாணவர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான இன்னாசி வரவேற்றார்.

    இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி முன்னாள் மாணவரும் (பழனி)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இக்கல்லூரி அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறதை ஒரு முன்னாள் மாணவனாக கண்டு மகிழ்கிறேன். மேலும் மாணவர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்களா கவும் வளர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசி போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம் செயலர் அந்தோ ணிசாமி, முதல்வர் அன்ப ரசு, இணை முதல்வர் சுந்தர ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    உடற்கல்வி இயக்குநர் வனிதா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.

    ×