search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிமா சங்கம்"

    • மதுரையில் அரிமா சங்க கூட்டம் நடந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி மற்றும் ராயல் எம்பரர் சங்கங்கள் ஏற்பாடு செய்தன.

    மதுரை

    அகில உலக அரிமா சங்கம் மாவட்டம் 324 பி வட்டாரம் 31 உள்பட அரிமா சங்கங்கள் மாவட்ட ஆளுநரின் வருடாந்திர அதிகாரபூர்வ வருகை மற்றும் வட்டாரம் 31-ன் 3-வது வட்டார கூட்டம் அண்ணாநகரில் நடந்தது.

    ஆளுநர் டாக்டர் ரவீந்திரன் உள்ளிட்ட அமைச்சரவை நிர்வாகிகள் சங்கங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகம் சம்பந்தமாக ஆய்வு செய்து சங்கங்களின் செயல்பாடுகளை பாராட்டி பேசினர். வட்டாரதலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3-வது வட்டார கூட்டம் நடந்தது.

    இதற்கு மதுரை செந்தமிழ், பென்னிகுக், ஸ்மார்ட் சிட்டி மற்றும் ராயல் எம்பரர் சங்கங்கள் ஏற்பாடு செய்தன.

    சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு மதுரை செந்தமிழ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பொறியாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    • 30 பெண்களுக்கு சேலை, 10 நபர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் கிளாசிக் அரிமா சங்கத்தின் ஆளுநர் வருகை தின நிகழ்ச்சி தெற்கு ரதி வீதியில் உள்ள ஏ.ஆர்.திவ்யா பேக்டரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளாசிக் அரிமா சங்க தலைவர் தொழிலதிபர் திவ்யா ரெங்கன் தலைமை தாங்கினார். ரமேஷ் பாபு தொகுத்து வழங்கினார். செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதில் மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட முதல் பெண் உறுப்பினர் கலையரசி ஆகியோர் கலந்துகொண்டு சங்கரன்கோவில் கிளாசிக் அரிமா சங்கத்தின் சிறப்புகளையும், 234 நாட்கள் தொடர்ந்து பசிக்கு உணவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் திட்டத்தையும் பாராட்டி பேசினர். இதில் 30 பெண்களுக்கு சேலை, 10 நபர்களுக்கு அரிசி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அமைச்சரவை செயலாளர், பொருளாளர், மண்டல தலைவர் அன்பின் கிறிஸ்டோபர் மற்றும் பல சங்கங்களில் இருந்து திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் கதிர்வேல் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • அலங்காநல்லூரில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடந்தது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் பள்ளி வளாகத்தில் அரிமா சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நடைபெற்றது.

    முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார தலைவர் ஜெயராமன், சங்க முன்னாள் தலைவர் நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் ரகுபதி வரவேற்றார்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    பின்னர் சங்கத்தின் புதிய தலைவராக மனோகரவேல் பாண்டியன், செயலாளராக கண்ணன், பொருளாளராக சோமசுந்தரம் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    ×