search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பொதுத்தேர்வு"

    • தமிழ்நாட்டில் 22-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் 2022-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த 15641 மாணவர்கள், 15474 மாணவிகள் என மொத்தம் 31115 மாணவ-மாணவியரும், 865 தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    இதில் 452 மாற்று திறனாளி மாணவர்களும் அடங்கும்.

    மாவட்டத்தில் மொத்தம் 136 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காலையிலேயே தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் வநதனர்.

    பலர் அவரவர் வழிபாட்டு தலங்களில் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும பெற்றோரிடம் ஆசி வாங்கினர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன், காலகுலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    மாற்றுதிறனாளி மாணவர்கள் எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தேர்வுப் பணியில் 136 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 136 துறை அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள் 195 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1872 அறைக்க ண்காணிப்பாளர்கள், 399 சொல்வதை எழுதுபவர்கள், 272 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இது தவிரதேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பஸ்கள் இயக்கபட்டன.

    • அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு
    • இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்று ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோதும், இதே போன்று நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.
    • சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    மார்ச் 2-வது வாரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பெரும்பாலான மாணவர்களை தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.

    நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதற்கான பணிகள் நடந்து வந்தாலும், தேர்வெழுத தகுதியான மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை காலை, மாலை நேரங்களில் நடத்திக் கொள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    அவ்வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடந்தாலும், பொதுத்தேர்வு தொடங்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், ஒவ்வொரு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு துவங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனி ஆசிரியர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், மாலை, இரவு நேர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கி வருகிறோம்.

    மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்புகளுக்கு வரும் நேரம், வீடு சென்றடையும் நேரம் பெற்றோருக்கு அறிவுறுத்தி விடுவதால் பெற்றோரும் இரவு வரையிலான வகுப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.100சதவீத தேர்ச்சியை பள்ளிகள் எட்டவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    ×