search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் அவதாரம்"

    • ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும்.
    • திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும்.

    பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்பதனால், அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல், துர்க்கா தேவி ஆலயம் சென்று வழிபடுதல் கஷ்டங்களைக் குறைக்கும்.

    திருவாதிரைக்கு பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும். மேலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது, கடன், நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும். குடும்பப் பிரச்சினைகள் என்றால் துர்க்கா தேவி வழிபாடும், பிரச்சினை தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ திருவனந்தபுர ஆண்டவரை வழிபடுவதும் பலன் தரும்.

    திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய, நன்மைகள் பெருக வழிவகுக்கும். பூரம் நட்சத்திரத்திற்கு 13 மற்றும் 15 நட்சத்திரங்கள் மிகவும் சேமம், நன்மை தரும் நட்சத்திரம். பரணி, சித்திரை நட்சத்திரம் போலவே அவிட்ட நட்சத்திரம் யோகம் தரும் நட்சத்திரமாகும். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களாலும் நன்மைகள் கிடைக்கும்.

    பூரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதியின் பெயர்கள் ஆகாது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம், தைரியம் மனம் இருப்பார்கள், தான தர்மம், காரியங்களில் முழுமையான ஈடுபாடு கொண்டு இருப்பார். நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் தலத்தில் சிவதீர்த்தம், நாகதீர்த்தம், ஞான பிரம்மா தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம், குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திரம் இவ்வளவு சிறப்பு பெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை முதல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர்ததூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிதீதேஸ்வரர் ஆலயம் ஆகும்.

    இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளான்று இத்தலத்தில அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பேறு பெறலாம். இதற்கு ஆடி பூரம் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    ×