search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு"

    • கலைவிழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
    • கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழக அரசு செயல்படுகிறது என பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழக அரசு பள்ளி க்கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுகப்பிரியா வரவேற்று ப்பேசினார். 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனங்கள் ஆடி தங்களின் திறமைகளை காட்டினர். மேலும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்றனர்.

    விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கி அவர் பேசிய தாவது :-

    பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளை இரு கண்களாக நினைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.

    மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களை கொண்டு நல்ல கல்வி கற்று வாழ்க்கை யில் உயரவேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (தொட க்கல்வி) செந்தில்முருகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, கே.ஆர்.அரசு மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி, வட்டார வளமைய வட்டார ஒருங்கிணைப்பாளர் முனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • சிரமங்களை தவிர்க்க விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். விழாவில் 2182 பயனாளிகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை ஆகியவற்றை அமை ச்சர்கள் பெரிய கருப்பன், இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15,06,189 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக த்தில் 26,261 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,124 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 36,405 நியாயவிலைக் கடைகள் உள்ளன.

    மேலும் நியாயவிலைக்க டைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில் விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகததில் சுமார் 3.50 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

    நியாய விலைக்கடைகளி ல் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் எந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்ய ப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 31,000 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    நுகர்வோர் தொடர்பான விழாக்கள், போட்டிகள், பரிசுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட படைப்பாற்றலின் வெளி ப்பாடாக அமைந்துள்ள நிலையில், மாணவ-மாணவிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பெருவாரியாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கான விவரங்கள் திரட்டுகையில், நுகர்வு தொடர்பான வழிகாட்டுதலும், அதன் விதிமீறல் மற்றும் முறையற்ற வணிகம், நுகர்வோருக்கு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளும் தொடர்ந்து ஆராயப்படு மாகையால், இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எதிர்காலத்தில் முழுமை யான விழிப்புணர்வு பெற்ற நுகர்வோர்களாக திகழ்வா ர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார் என பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அதன்படி, எல்ல ப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணிகள், ரூ.10.84 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுதல், ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து, மார்க்கம்பட்டி ஊராட்சியில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஐ.வாடிப்பட்டி ஊராட்சியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகள், குத்திலியப்பை ஊராட்சியில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்தல் பணிகள் ஆகிய பணிகளை அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பேசியதாவது:-

    ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றில் இருந்து தனித் திட்டம் கொண்டு வர ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதி மக்கள் அனைவருக்கும் சுகாதார மான குடிநீர் கிடைக்கும். 2 ஆயிரம் கி.மீ தூரத்துக்கான சாலைப்பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒட்டன்சத்திரம் சட்மன்ற தொகுதிக்கு மட்டும் 100 கி.மீ சாலை அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஒட்ட ன்சத்திரத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மேலும் 6.40 லட்சம் மரக்கன்றுகள் இடையகோட்டை பகுதியில் நடவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு ள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். காலை உணவு திட்டம் விரைவில் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவி களையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஜோதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணை த்தலைவர் ராஜாமணி, வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.

    ×