search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க ஆய்வு"

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    ×