search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக பிரமுகர் கொலை"

    • ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது.
    • ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு ரெட்டிபாளையம் பிரதான சாலையில் கடந்த 5-ந்தேதி அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(வயது 45) மர்ம கும்பலால் தனது மீன் கடையின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த நொளம்பூர் போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2015-ம் ஆண்டு மதன் என்பவரின் கொலையில் ஆரம்பித்த இந்த சம்பவம் தொடர்ந்து வீரபாண்டியன், 2021-ம் ஆண்டு அவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரை தாண்டி தற்போது ஜெகனின் கொலையில் வந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜெகன் கொலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ், அறிவு என்கிற அறிவழகன், சிவா என்கிற சிவசுப்பிரமணியம், சுதாகர் ஆகிய 4 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் நள்ளிரவு சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ஜெகன் கொலைக்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தி என்பது தெரிந்தது. அவர் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். அதன் பேரில் நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் அவரை நேற்று திருச்சி சிறையில் இருந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதனை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து ரவுடி மந்திர மூர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.
    • கொலையாளிகள் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது48). அப்பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஜெகன் மீன்கடையில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மீன்கடைக்குள் புகுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் அவர்களிடம் இருந்து தப்பிக்க கடையில் இருந்து சாலையில் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை விரட்டிசென்ற கும்பல் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலையாளிகள் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொலை நடந்த இடம் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பழிக்குப்பழியாக ஜெகன் தீர்துக்கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலையுண்ட ஜெகனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகும். இவரது அண்ணன் மதன் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதற்கு பழிவாங்க கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ் தீர்த்துக்கட்டப்பட்டார். இந்த கொலைவழக்கில் கைதான ஜெகன் ஜாமீனில் வெளிவந்து பின்னர் தலைமறைவானார். எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி தொடர்ந்து தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஜெகன், முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கியிருந்தபடி மீன்கடை நடத்தி வந்தார். இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட ராஜேஷின் கூட்டாளிகள் பழிக்கு பழியாக ஜெகனை தீர்த்து கட்டடி இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×