search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனன்யா பாண்டே"

    • முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    • நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்

    சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஆண்டுதோறும் ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பலருக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ராகுல் சிவசங்கர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே மற்றும் சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விருது நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் நிறுவன மேலாண் இயக்குநர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் ஆண்டாள் கல்பாத்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்த விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் பொது சேவையில் ஈடுபட்டுள்ள பலருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

    • மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனன்யா பாண்டே நடித்து வருகிறார்.
    • வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர்', 'டிரீம் கேர்ள்-2 புல்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கண்ட்ரோல்' என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, தற்போது முன்னாள் நடிகைகள் சிலரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னாள் நடிகைகள் மதுபாலா மற்றும் ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க விரும்புவதாக கூறிய பல இயக்குனர்களின் கவனம் தற்போது அனன்யா பாண்டே மீது திரும்பி இருக்கிறது.

    • பாலிவுட்டில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டவர் அனன்யா பாண்டே.
    • இவர் சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 'லைகர்’ திரைப்படத்தில் நடித்தார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான சங்கி பாண்டேயின் மகள் அனன்யா பாண்டே கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தொடர்ந்து இவர் 'பதி பத்னி அவுர் வா' போன்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார்.


    அனன்யா பாண்டே

    சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே தற்போது பல விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.


    தோழிகளுடன் புகைப்பிடிக்கும் அனன்யா பாண்டே

    அதாவது, அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அனன்யாவிற்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..? என்று விமர்சித்து வருகின்றனர்.

    ×