என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அதிரடிப்படை வீரர்
நீங்கள் தேடியது "அதிரடிப்படை வீரர்"
சத்தியமங்கலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அதிரடிப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அன்னூர் கவுண்டர் தோட்டம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36).
இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை பிரிவில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு வந்தார். பிறகு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மேட்டுப்பாளையம் ரோடு திருநகர் காலனி பகுதியில் சென்ற போது அவருக்கு முன்னால் கோணமூலை பகுதியை சேர்ந்த கண்ணன் (17) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென கண்ணன் வலது புறமாக திரும்பினார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் கார்த்திகேயன் கீழே விழுந்ததில் அவரது தலை, முகம், தாடையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி பெயர் கவிதா, அரசுபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அன்னூர் கவுண்டர் தோட்டம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36).
இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை பிரிவில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு வந்தார். பிறகு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மேட்டுப்பாளையம் ரோடு திருநகர் காலனி பகுதியில் சென்ற போது அவருக்கு முன்னால் கோணமூலை பகுதியை சேர்ந்த கண்ணன் (17) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென கண்ணன் வலது புறமாக திரும்பினார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் கார்த்திகேயன் கீழே விழுந்ததில் அவரது தலை, முகம், தாடையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி பெயர் கவிதா, அரசுபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X