search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதியமான் கோட்டை பைரவர்"

    • மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.
    • குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.

    இதனால் அதியமான், எப்போதும் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

    குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    அதன் அடையாளமாக இன்றும் இக்கோவிலில் வாள் வைத்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கோவில் அமைவிடம்

    தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் கோவில்.

    தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது.

    பஸ் நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.
    • ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    12 ராசிக்காரர்கள் கால பைரவரின் எந்தெந்த பகுதியை வணங்கினால் தோஷம் விலகும் என்பதை பார்ப்போம்.

    மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.

    ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    மிதுன ராசிக்காரர்கள் தோல், புஜம் இவற்றை பார்த்து வணங்கினால் தோஷம் நீங்கும்.

    கடக ராசியினர் மார்பு பகுதியை வணங்க தோஷம் குறையும்.

    சிம்ம ராசிக்காரர்கள் வயிறு பகுதியை வணங்க வேண்டும்.

    கன்னி ராசியினர் பைரவ பெருமானின் குறியை வணங்க வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் தலை பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    விருச்சிக ராசிக்காரர்கள் முட்டி பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    தனுசு, மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    கும்ப ராசியினர் கணுக்காலை வணங்க வேண்டும்.

    மீன ராசிக்காரர்கள் பாதத்தை பார்த்து வணங்க வேண்டும்.

    • அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.
    • இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    இத்தகைய சிறப்புகள் பெற்ற கால பைரவரை அதியமான் மன்னன் வழிபட்டு மனசங்கடங்கள் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றார்.

    அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.

    மேலும் தன் கோட்டை சாவி, கஜானா சாவி என அனைத்தும் கால பைரவரிடம் வழங்கி பாதுகாத்து வந்தார்.

    அதுமட்டுமின்றி அதியமான், தனது வீரவாளை தினமும் கால பைரவரின் பாதங்களில் வைத்து காலையும், மாலையும் பூஜைகள் செய்து எடுத்து சென்றார்.

    அதனால் தான் அவரது நினைவாக இன்றும் கூட இக்கோவிலில் கால பைரவரின் திருக்கரங்களில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    அவரின் தலையிலே அக்னி பிழம்பை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும் கழுத்தினில் கபால மாலையுடனும் பூணூல் அணிந்தும் அரைஞான் கயிறாக பாம்மை முடிந்தும் கால்களிலேயே சலங்கினை கொண்டும் காட்சியளிக்கிறார்.

    மேலும் தனது நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையுடன் கீழ்கரத்தில் திரிசூலத்துடனும் இடதுமேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும் ஏந்தியுள்ளார்.

    மேலும் பத்மா பீடம் என்று சொல்லக்கூடிய பீடத்தில் அசுரசோன வாகன என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தில் நின்ற கோலத்துடன் நிர்வாணமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.
    • அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னன் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள் தீர்க்க வேண்டி அவரின் அரச வையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.

    அப்போது ஜோதிடர்கள் , மன் னன் அதியமானிடம், "உங்கள் மனசங்கடங்கள் தீர்ந்து நிம்மதியும், வெற்றியும் பெற வேண்டுமானால் கால பைரவருக்கு தனிக்கோவில் கட்ட வேண்டும்.

    ஆனால் ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.

    அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    எனவே காலபைரவர் அவதரித்த காசிக்கு சென்று கால பைரவர் கோவிலில் திருகங்கை பூஜை செய்து காசி கால பைரவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

    கங்கை நதியில் இருந்து கல்லெடுத்து கால பைரவரின் கோவிலுக்கு சிலை வடிவமைத்து அதற்கான பூஜைகளை செய்து அங்கிருந்து அதியமான்கோட்டைக்கு கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டும்.

    மேலும் கோவில் மகா மண்டபத்தில் ஒன்பது நவக்கோள்களின் சக்கரத்தையும் மகா மண்டப மேல்கூரையில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்"என்று தெரிவித்தனர்.

    இதன்படி மன்னர் அதியமான், தனது படைகளுடன் காசிக்கு சென்று காசி காலபைரவரின் அருளுடன் சிலையை வடிவமைத்து பூஜைகள் செய்து அதியமான்கோட்டையில் மயானத்தில் கால பைரவரை எழுந்தருள செய்தார்.

    • சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.
    • இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அதிய மான்கோட்டையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடு மான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட ஸ்ரீதட்சிணகாசி கால பைரவர் கோவில் கட்டப்பட்டதாகும்.

    காசிக்கு அடுத்தப்படியாக கால பைரவருக்கு என்று இந்தியாவிலேயே 2வது திருத்தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.

    எமனும் நடுங்கும் தோற்றம்

    சிவபெருமானின் அவதாரமாக விளங்கக் கூடியவர் கால பைரவர்.

    தனிக்கோவிலாகிய விளங்கக்கூடிய காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.

    உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் கால பைரவரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

    இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    எனவே வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சினைகளும் மன சங்கடங்களும் நீங்கப் பெறும் ஒரே கோவில் ஆகும்.

    எல்லாவிதமான வழிபாட்டுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

    ×