search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் சுவாமி கோவில் வரலாறு
    X

    ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் சுவாமி கோவில் வரலாறு

    • சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.
    • இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அதிய மான்கோட்டையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடு மான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட ஸ்ரீதட்சிணகாசி கால பைரவர் கோவில் கட்டப்பட்டதாகும்.

    காசிக்கு அடுத்தப்படியாக கால பைரவருக்கு என்று இந்தியாவிலேயே 2வது திருத்தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.

    எமனும் நடுங்கும் தோற்றம்

    சிவபெருமானின் அவதாரமாக விளங்கக் கூடியவர் கால பைரவர்.

    தனிக்கோவிலாகிய விளங்கக்கூடிய காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.

    உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் கால பைரவரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

    இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    எனவே வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சினைகளும் மன சங்கடங்களும் நீங்கப் பெறும் ஒரே கோவில் ஆகும்.

    எல்லாவிதமான வழிபாட்டுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

    Next Story
    ×