search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக விருப்ப மனு"

    • விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
    • பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜனதா உறவை துண்டித்த அ.தி.மு.க. தனி அணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்ற நிலையில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வினியோகம் இன்று தொடங்கியது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரொக்கமாக பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர்.

    முதல்நாள் என்பதால் பலரும் மனுக்கள் வாங்குவதற்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. எந்த தொகுதிக்கு போட்டியிட மனு பெறப்பட்டது என்ற விவரத்தை நிர்வாகிகள் பதிவு செய்தனர்.

    தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு சென்று இருந்தனர்.

    விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் தொகுதி பங்கீடு, கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் எந்த தொகுதிக்கு பணம் கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    ×