என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதானி நிறுவனம்"
- இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்லா :
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது.
- முதலீட்டாளர்கள் நலன் கருதி பங்கு விற்பனை ரத்து செய்வதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார்.
அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது. முதலீட்டாளர்கள் நலன் கருதி இந்த பங்கு விற்பனை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்