search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா மேம்பாலம்"

    • சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது.

    சென்னையின் முக்கியமான அடையாளமான ஒன்று அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையில் உள்ள இந்த மேம்பாலத்தின் அருகில் 1976-ம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ செயல்பட்டு வந்தது. அதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த மேம்பாலம் அழைக்கப்படுகிறது.

    அண்ணா மேம்பாலம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. 1971-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24 லட்சத்தை கடந்தது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியது. சென்னையின் தென்மையான அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

    குறிப்பாக அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் 1970-ம் ஆண்டுகளில் தினமும் 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதன் விளைவாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கின. 1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுவாகும். மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இதுவாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த பாலத்தை கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.66 லட்சம் ஆகும்.

    இந்த மேம்பாலத்தை 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு 'அண்ணா மேம்பாலம்' என்றும் பெயர் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையும் நிறுவப்பட்டது.

    பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் அவரது சிலையை நிறுவ அப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். கோரிக்கை வைத்தார். அதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்தார். சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன.

    இந்நிலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு நாளை (சனிக்கிழமை) 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனாலும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிப்பதுடன், சென்னையின் அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்கிறது. சென்னை தற்போது மேம்பாலங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முதன் முதலில் வித்திட்டது அண்ணா மேம்பாலம் தான். அண்ணா மேம்பால சந்திப்பில் இன்று 3 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. நாளையுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அண்ணா மேம்பாலம் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த மேம்பாலம் தற்போது ரூ.8.85 கோடி செலவில் சீரமைத்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிந்து விடும். அதன் பிறகு அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளமாக தொடர்ந்து புதுப்பொலிடன் காட்சியளிக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
    • மேம்பாலத்தில் உள்ள 97 தூண்களும் நவீன ரெடிமேட் கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலம் ஆகும்.

    அண்ணா சாலையில் இருந்து மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி, பாரிமுனை செல்வதற்கு வசதியாக 5 முனை சாலை சந்திப்பில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது.

    இந்த மேம்பாலம் 600 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலத்தின் அப்போதைய கட்டமான செலவு ரூ. 66 லட்சம் ஆகும்.

    அந்த மேம்பாலம் கட்டப்பட்ட போது தினமும் அந்த வழியாக 20 ஆயிரம் வாகனங்கள் சென்றன. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் அப்போது ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. எனவே ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு இந்த மேம்பாலத்துக்கு அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேம்பாலத்தை வலுப்படுத்தி அழகுபடுத்தி புதுப்பிக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்காக அரசு சார்பில் ரூ.8.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்தில் உள்ள 97 தூண்களும் நவீன ரெடிமேட் கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணிகளுக்காக ஏற்கனவே அங்கிருந்த மேம்பால தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டன. தூண்களை பலப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகள் முடிந்ததும் பாலம் முழுவதும் வண்ணம் தீட்டப்படுகிறது.

    அதன் பிறகு பாலத்தின் கீழ் பூஞ்செடிகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்தமாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது.

    • அண்ணா மேம்பாலத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் ரூ.8.85 கோடி செலவில் நடந்து வருகிறது.
    • கருணாநிதி அடிக்கல் நாட்டியது, திறந்து வைத்தது அடங்கிய கல்வெட்டு மக்கள் பார்வையில் படாதபடி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலத்துக்கு வயது 50. பாலங்கள் நிறைந்த சென்னையின் முதல் மேம்பாலம் இதுதான்.

    மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் 1971-ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.66 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 1.1.1973 அன்று கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் ரூ.8.85 கோடி செலவில் நடந்து வருகிறது. ஜி.ஆர்.சி. பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. தூண்களும் அழகுபடுத்தப்படுகிறது. பாலத்தின் கீழ் பூஞ்செடிகள் நடப்பட உள்ளது.

    இரு பக்க சுவர்களும் மாற்றியமைக்கப்பட்டு சங்கு தீபங்கள், திராவிட இயக்கத்தின் அடையாளமாக முக்கோண தீப சின்னங்களும், 6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சிங்க சிலைகளும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வளைவானது யானையின் தும்பிக்கை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி சாம்பல் வர்ணம் பூசப்பட்டு இருளிலும் ஒளிரும் வகையில் அழகுபடுத்தப்படுகிறது.

    கருணாநிதி அடிக்கல் நாட்டியது, திறந்து வைத்தது அடங்கிய கல்வெட்டு மக்கள் பார்வையில் படாதபடி உள்ளது. அதை மக்கள் பார்வையில் படும்படி வைக்கப்படுகிறது.

    பாலத்தின் அருகே அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு விசா விசாரணைக்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதியாக அந்த இடத்தில் சிமெண்ட் பெஞ்சுகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×