search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணையை ரசிக்கும்"

    • எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
    • இந்த பகுதி எப்போதும் பச்சை பசேலென காட்சி அளிக்கும்

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் தாமரைக்கரை மிகவும் உயரமான பகுதியாக இருந்து வருகிறது.

    அந்தியூர், பர்கூர் வழி யாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பிர தான சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக செல்வதால் மைசூருக்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. மேலும் லாரி, டெம்போ என சரக்கு வாகன ஓட்டிகள் அதிகள வில் இந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் பர்கூர் மலை ப்பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பச்சை பசே லென காட்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

    மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் விவசாய பொருட்களை விவசாயிகள் அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதிகளில் வெயில் காலங்க ளிலும் குளிர்ந்த காற்றுவீசு கிறது. இதனால் தற்போது இந்த பகுதிக்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறா ர்கள். இதனால் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.

    ஊட்டி, ஏற்காடு, கொடை க்கானல் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியா தவர்கள் ஈரோடு மாவட்ட த்தில் பல்வேறு பகுதி களிலிருந்தும் பர்கூர் மலைப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வந்து தங்கி இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பகுதியை ரசிக்க ஏராளமா னோர் வந்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து மலைகளில் உள்ள மரங்கள் வாடி இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. தற்போது அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதையடுத்து பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை மலைப்பகுதிகள் மேலும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மலைப்பாதையின் முன் பகுதியில் சுற்றுலா பயணி கள் செல்பி எடுத்து செல்கி றார்கள்.

    மேலும் இந்த மலைப்பகுதி வழியாக கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மலை யின் அழகை கண்டு வாகனங்களை ஓரமாக நிறுத்தி இந்த ரசித்த ப்படியே செல்கிறார்கள். இதனால் இந்த மலையின் அழகை ரசிப்பதற்காகவே தினமும் பலர் இந்த வழியாக வருகிறார்கள்.

    மலைப்பாதை வழியாக செல்லும்போது சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி வரட்டு பள்ளம் அணையின் முழு தோற்றத்தையும், அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளையும் காண முடிவதால் பர்கூர் வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் அணையின் தோற்றத்தையும் ரசித்து செல்கின்றார்கள்.

    ×