search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதி"

    • திருச்சுழி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
    • உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சியில் காரேந்தல், கொக்குளம், நாடாக்குளம், பள்ளிமடம் மற்றும் ஊரணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்கள் உள்ளது. பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு பல மாதங்களாக குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த 2020-21-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரணிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குழாய்களில் தாமிரபரணி குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது. அதையும் கூட ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவது இல்லை.

    இதனால் அன்றாடம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு இடையே நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவழித்து 4 முதல் 8 குடங்கள் வரை தனியார் குடிநீர் வாகனங்களில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

    குடியிருப்புகள் வழியே முறையான சாலை வசதி யில்லாத காரணத்தால் மழைக்காலங்களின் போது தெருக்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவுகளில் வாழ்வதை போல உள்ளது. மேலும் தேங்கிய மழைநீரில் முழங்கால் வரை நனைந்த படி நடந்து செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதனால் வீணாகி வரும் சிறிதளவு தண்ணீரையே வெகு நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    ×