search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கும் பணி"

    • வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது.
    • இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே கிடக்கும் கழிவுகளில் கொசுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

    • காங்கயம் நகர பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது.
    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நகரப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ள பகுதிகள், தினசரி மார்க்கெட்டுகள், பஸ் நிலைய வளாகங்கள், கடைவீதி பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தெரு தெருவாக சென்று கொசு மருந்து புகை அடிக்கும் பணிகள் நடைபெற்றது.

    ×