search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spraying"

    • மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.
    • கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலி நோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் செல்வ விநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா ஆகியோரின் உத்தரவுப் படி ஏர்வாடி தர்கா பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏர்வாடி தர்ஹா கமிட்டி தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் தொடங்கி வைத்தார்.

    30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்களும் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள னர்.

    நேற்று தொடங்கிய இப்பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள், கண்ணன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத் துரை, ராஜசேகரன், சுப்பிர மணியன், இஜாஜ் முகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காங்கயம் நகர பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது.
    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நகரப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ள பகுதிகள், தினசரி மார்க்கெட்டுகள், பஸ் நிலைய வளாகங்கள், கடைவீதி பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் மூலம் தெரு தெருவாக சென்று கொசு மருந்து புகை அடிக்கும் பணிகள் நடைபெற்றது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காய்கறி செடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தது. இதையொட்டி தங்களது விளைநிலங்களை தயார்படுத்தி கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மேரக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது மழை குறைந்து பயிர்களுக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால், களை பறித்து மழைநீர் செல்லும்படி தோட்டங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. மேலும் அவ்வப்போது மழை பெய்வதால் உரமிட்டு, செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கோத்தகிரி பகுதியில் போதியளவு மழை பெய்ததால், தரிசாக கிடந்த நிலத்தை உழுது காய்கறிகளை பயிரிட்டு உள்ளோம். அதிலும் தற்போது பீட்ரூட்டுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் எங்களது தோட்டத்தில் பீட்ரூட் பயிரிட்டுள்ளோம். நடவு செய்து 2 மாதங்களில் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகிவிடும். தற்போது பூச்சிகள் தாக்காமல் இருக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி லிட்டர் என்ற அளவில் டுபோண்ட் என்ற பூச்சி மருந்தை கலந்து செடிகளில் தெளித்து வருகிறோம். மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. எனவே இந்த முறை பீட்ரூட் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×