search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது
    X

    கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது

    • மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.
    • கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலி நோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் செல்வ விநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா ஆகியோரின் உத்தரவுப் படி ஏர்வாடி தர்கா பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏர்வாடி தர்ஹா கமிட்டி தலைவர் முகமது பாக்கீர் சுல்தான் தொடங்கி வைத்தார்.

    30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 50 பணியாளர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்களும் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள னர்.

    நேற்று தொடங்கிய இப்பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுனர்கள், கண்ணன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத் துரை, ராஜசேகரன், சுப்பிர மணியன், இஜாஜ் முகமது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×