என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடகு கடை ஊழியர்"
- பிரகாஷ் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார்.
- டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருகொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41) இவர் காரைக்கால் அடுத்த சேத்தூர் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி 8 மாத கர்ப்பிணி. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தொடர்பாக சிகிச்சையில் உள்ளார். நேற்று இரவு மனைவிக்கு இரவு உணவு வழங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலையில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரகாஷ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பிரகாஷ் தலைக்குப்புற சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் (46) அவரது மனைவி மற்றும் மகன்கள் இருந்தனர்.
இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 4 பேரையும் தனித்தனி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்தவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பிரகாசை சோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பிரகாஷின் சகோதரர் லட்சுமணன் காரைக்கால் போக்குவர த்துக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோவின் மனைவி மற்றும் மகன்கள் முதலுதவி பெற்று வீடு திரும்பினார். இளங்கோ தொடர் சிகிச்சையில் உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்