என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அக்ஷரா"
- சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
- சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இளைய மகள் அக்ஷரா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.
சுரேஷ் சுமை தூக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேசுக்கு தொண்டை புற்றுநோய் பாதித்தது.
அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்ததால் உடனடியாக பாம்பாடியில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே உள்நோயாளியாக சிகச்சை பெற்று வருகிறார். சுரேசை அவரது மனைவி சுனிதா உடனிருந்து கவனித்து வருகிறார்.
சுரேஷ் புற்றுநோய் பாதித்து படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் போனது. இதனால் அவரது மூத்த மகன் பிளஸ்-2 படித்து முடித்தவுடன் வெல்டிங் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் சம்பாதிக்கும் பணத்தின் மூலமாகவே சுரேசின் குடும்பம் பிழைத்து வருகிறது.
சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களது இளைய மகள் அக்ஷரா பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
தந்தையின் மீது மிகவும் பாசம் வைத்திருக்கும் அவர், சுரேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அங்கேயே இருந்து வருகிறார். தந்தைக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை நேரம் தவறாமல் அவரே வழங்கி வருகிறார். தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக சுரேசால் பேச முடியாது.
இதனால் அவர் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி காண்பிப்பார். அதனை சிறுமி பார்த்து தந்தை கூறுவதை செய்தபடி இருக்கிறார். சிறுமி ஒருவர் தந்தையை பொறுப்பாக கவனித்து வருவதை அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்றவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.
தந்தையை உடனிருந்து கவனித்தாலும் படிப்பையும் சிறுமியால் மறக்க முடியவில்லை. இதனால் தந்தை சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் உள்ள நூலகத்துக்கு சென்று வந்தார். மேலும் அங்கிருந்து புத்தகங்களை எடுத்துவந்து தந்தையுடன் உள்ள தனது தாய்க்கு கொடுத்து படிக்க செய்திருக்கிறார்.
பள்ளி படிக்க வேண்டிய ஒரு சிறுமி, பள்ளிக்கு செல்ல முடியாமல் தந்தைக்கு சேவை செய்து வருவது பற்றிய தகவல் சில சிறுவர்கள் மூலமாக மருத்துவமனையில் நூலகம் அமைத்திருந்த பள்ளியின் நல்லபாடம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரியவந்தது.
அவர்களின் மூலமாக சிறுமி அக்ஷரா பற்றிய விவரம் தற்போது வெளியுலகுக்கு தெரியவந்திருக்கிறது. சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூத்த மகன் மற்றும் தினக் கூலிகளாக பணிபுரியும் தனது தோழிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே கணவரின் மருத்துவ செலவுகளை சுனிதா செய்து வருகிறார்.
இந்நிலையில் படிப்பில் ஆர்வமாக உள்ள மகளை எவ்வாறு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்