என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ZIMvIND"
- ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மும்பை:
இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளதால் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
- பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
- காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.
மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவரின் காயத்தின் அளவு தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடற்தகுதியில் தொடர்ந்து சிக்கல்கள் உள்ளன.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காயம் ஒரு பெரிய பயமாக உள்ளது.
பிப்ரவரி 2022 முதல் சுந்தர் இந்தியாவுக்காக விளையாடவில்லை. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை சுந்தர் தவறவிட்டார்.
பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஹராரே:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டி (3 ஆட்டம்) தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி (5 ஆட்டம்) தொடரை 4-1 என்ற கணக் கிலும் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
வருகிற 18-ந்தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. 2-வது போட்டி 20-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் ஹராரேவில் நடக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அேலஷ்கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாகர்.
- ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் உள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 7-ந்தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே செல்கிறது.
அந்த அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22-ந்தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் ஹராரேயில் நடக்கிறது.
ஜிம்பாப்வே தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் ஆஸ்ரேலியாவில் நடக்கிறது.
இதற்காக இந்திய அணி முழு வீச்சில் தயார் செய்ய இந்த சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் நியமனம் இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்