search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young man died"

    • பாறைகுழியில் மீன்பிடித்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

    வெள்ளகோவில் :

    கரூர் மாவட்டம், ஆரியூர், சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குப்புசாமி (வயது 24). இவரது மனைவி மஞ்சுளா தேவி (25).இருவரும் நேற்று ஆரியூரில் இருந்து வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக பைக்கில் வந்துவிட்டு நேற்று மதியம் ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் உள்ள பாறைக்குழி அருகே நின்று தனது மனைவியை இறக்கிவிட்டு பாறை குழியில் மீன்பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்து நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

    இதை அறிந்த மனைவி மஞ்சுளாதேவி சத்தம் போட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது முழுமையாக நீரில் மூழ்கி விட்டார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து நீரில் மூழ்கி இறந்து கிடந்த குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன குப்புசாமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
    • நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அண்ணாநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாலமுருகன்(வயது 26).

    மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

    உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது பழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்(25).

    இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் தடைபட்டு வந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த முத்துக்குமார் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஓடையில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலபரவு செல்லும் சாலையில் உள்ள கழிவுஓடை பகுதியில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து குரங்கனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(28). ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மேலபரவு செல்லும் சாலையில் உள்ள கழிவுஓடை பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து குரங்கனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள குஜிலியம்பாறை மாயாண்டிபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் மகன் ஜெயப்பிரகாஷ்(20).

    இவர் திருச்சி ரோடு கல்லறைமேடு பகுதியில் நுங்குவியாபாரம் பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை தனது வீட்டிலேயே விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஏ.வெள்ளோடு தெற்குதெருவை சேர்ந்தவர் ஜோசப் மகன் லியோனிதர்மராஜ்(30). கொத்தனார் வேலை பார்த்துவந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஆத்தூர் சடையாண்டி கோவிலுக்கு வந்தார்.

    அப்போது அங்குள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே பைக் மீது வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் மஞ்சுநாயக்கன்ப ட்டியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஜெயக்குமார் (வயது 29).

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நாகலாபுரம் - டொம்புசேரி மெயின் ரோட்டில் சென்று கொண்டி ருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி பவித்ரா போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    ×