search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் பலி
    X

    கோப்புபடம்.

    பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் பலி

    • பாறைகுழியில் மீன்பிடித்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

    வெள்ளகோவில் :

    கரூர் மாவட்டம், ஆரியூர், சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குப்புசாமி (வயது 24). இவரது மனைவி மஞ்சுளா தேவி (25).இருவரும் நேற்று ஆரியூரில் இருந்து வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக பைக்கில் வந்துவிட்டு நேற்று மதியம் ஊருக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் உள்ள பாறைக்குழி அருகே நின்று தனது மனைவியை இறக்கிவிட்டு பாறை குழியில் மீன்பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கால் தடுமாறி பாறைக்குழிக்குள் விழுந்து நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

    இதை அறிந்த மனைவி மஞ்சுளாதேவி சத்தம் போட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது முழுமையாக நீரில் மூழ்கி விட்டார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து நீரில் மூழ்கி இறந்து கிடந்த குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன குப்புசாமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×