என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » young man arrest
நீங்கள் தேடியது "young man arrest"
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கதிராமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி. தனது மனைவி மற்றும் 17வயது மகளுடன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சென்றார்.
அவரது மகள் வாய்பேச முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்தார்.
விவசாயி தனது மனைவி, மகளுடன் கோவிலில் தரிசனம் செய்து பின்னர் மாலையில் ஊருக்கு செல்ல புறப்பட தயாரானார்.
அப்போது கோவில் வளாகத்தில் நின்றிருந்த மகளை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் மகளை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. பின்னர் இந்த விஷயம் அப்பகுதி கிராம மக்களுக்கும் தெரியவந்தது.
இதனால் அவர்களும், இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது கிராமத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு முட்புதர் மறைவில் இளம் பெண் சத்தம் போல் கேட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு இளம்பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
பொதுமக்கள் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் உடனே சுதாரித்து வேகமாக தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.
பிறகு அந்த வாலிபரை, பந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தனர்.
இதில் அந்த வாலிபர் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என தெரியவந்தது.
வாய்பேச முடியாத அந்த இளம்பெண்ணை சுரேஷ் சைகை மூலம் அன்பாக பேசி நடித்து ஏமாற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சுரேசை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி. தனது மனைவி மற்றும் 17வயது மகளுடன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சென்றார்.
அவரது மகள் வாய்பேச முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்தார்.
விவசாயி தனது மனைவி, மகளுடன் கோவிலில் தரிசனம் செய்து பின்னர் மாலையில் ஊருக்கு செல்ல புறப்பட தயாரானார்.
அப்போது கோவில் வளாகத்தில் நின்றிருந்த மகளை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் மகளை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. பின்னர் இந்த விஷயம் அப்பகுதி கிராம மக்களுக்கும் தெரியவந்தது.
இதனால் அவர்களும், இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது கிராமத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு முட்புதர் மறைவில் இளம் பெண் சத்தம் போல் கேட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு இளம்பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
பொதுமக்கள் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் உடனே சுதாரித்து வேகமாக தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.
பிறகு அந்த வாலிபரை, பந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தனர்.
இதில் அந்த வாலிபர் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என தெரியவந்தது.
வாய்பேச முடியாத அந்த இளம்பெண்ணை சுரேஷ் சைகை மூலம் அன்பாக பேசி நடித்து ஏமாற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சுரேசை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யாரேனும் வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்திச்செல்வதை தடுக்கும் வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சோதனைச்சாவடியில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் வழிமறித்து சோதனை செய்தபோது அந்த வாலிபர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகனை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்முருகனை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார்.
உடனே மற்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வானூர் தாலுகா நாவற்குளம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கணேஷ் என்கிற செங்குட்டுவன் (வயது 32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கணேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யாரேனும் வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்திச்செல்வதை தடுக்கும் வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சோதனைச்சாவடியில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் வழிமறித்து சோதனை செய்தபோது அந்த வாலிபர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகனை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்முருகனை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார்.
உடனே மற்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வானூர் தாலுகா நாவற்குளம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கணேஷ் என்கிற செங்குட்டுவன் (வயது 32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கணேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X