search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled woman"

    • மாற்றுத்திறனாளி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள முத்து ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது55). இவருக்கு சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறத்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே பெரிய பேராளி வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் சாந்தி(வயது48). இவர் பிறவிலேயே மாற்றுத் திறனாளி. சமீபத்தில் இவரது தாய் இறந்தார். இதனால் தன்னை பராமரிக்க ஆள் இல்லை என நினைத்து சாந்தி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.

    இந்தநிலையில் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்றிருந்தபோது சாந்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தர்மர்(வயது70). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேல்ராணி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
    • வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி மகள் வேல்ராணி ( வயது 40). இவர் மாற்றுத் திறனாளி. திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மின் சப்ளை கொடுக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்ராணி யின் சகோதரி ராஜலெட்சுமியின் மகன் அஜெய்செல்வனை, அதே ஊரை சேர்ந்த ரங்கேஷ் தாக்கியதாக வேல்ராணி தரப்பினர் களக்காடு போலீசில் புகார் செய்தனர்.

    இதனையறிந்த ரங்கேஷின் நண்பரான பணகுடி பேரூராட்சியில் என்ஜினீயராக உள்ள சரவணனின் தந்தை முத்துபாண்டி, வேல்ராணியின் உறவினரிடம் சென்று வேல்ராணி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கினால் மின் வாரியத்தினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்பதால் மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வேல்ராணியின் வீட்டி ற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து வேல்ராணி, முத்துபாண்டியிடம் சென்று மின் இணைப்பை துண்டிக்க செய்து விட்டீர்களே என்று தட்டிக் கேட்டார். அப்போது அங்கு வந்த சரவணன் எனது தந்தையிடம் தகராறு செய்கிறாயா என்று கூறி வேல்ராணியை கம்பால் தலையில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கதிராமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி. தனது மனைவி மற்றும் 17வயது மகளுடன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று சென்றார்.

    அவரது மகள் வாய்பேச முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்தார்.

    விவசாயி தனது மனைவி, மகளுடன் கோவிலில் தரிசனம் செய்து பின்னர் மாலையில் ஊருக்கு செல்ல புறப்பட தயாரானார்.

    அப்போது கோவில் வளாகத்தில் நின்றிருந்த மகளை காணாதது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் மகளை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. பின்னர் இந்த வி‌ஷயம் அப்பகுதி கிராம மக்களுக்கும் தெரியவந்தது.

    இதனால் அவர்களும், இளம்பெண்ணை தேடி வந்தனர். அப்போது கிராமத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு முட்புதர் மறைவில் இளம் பெண் சத்தம் போல் கேட்டது.

    இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு இளம்பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    பொதுமக்கள் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்த அந்த வாலிபர் உடனே சுதாரித்து வேகமாக தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.

    பிறகு அந்த வாலிபரை, பந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தனர்.

    இதில் அந்த வாலிபர் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என தெரியவந்தது.

    வாய்பேச முடியாத அந்த இளம்பெண்ணை சுரேஷ் சைகை மூலம் அன்பாக பேசி நடித்து ஏமாற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபர் சுரேசை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் அமுதசாந்தி. சிறு வயது முதல் மாற்றுத்திறனாளியான இவர் படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர்களால் படிக்க வைக்க முடியவில்லை. தனது உறவினர்கள் உதவியால் சாந்தி ஆசரமத்தில் படித்து கல்லூரி படிப்பை முடித்தார்.

    பின்னர், தியாகம் பெண்கள் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கினார். இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்தனர். மேலும், தனது கல்வியை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் அளித்தார்.

    9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கிராமப்புறக்களில் உள்ளவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

    ×