search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி பெண் உள்பட  3 பேர் தற்கொலை
    X

    மாற்றுத்திறனாளி பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    • மாற்றுத்திறனாளி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள முத்து ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது55). இவருக்கு சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறத்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே பெரிய பேராளி வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் சாந்தி(வயது48). இவர் பிறவிலேயே மாற்றுத் திறனாளி. சமீபத்தில் இவரது தாய் இறந்தார். இதனால் தன்னை பராமரிக்க ஆள் இல்லை என நினைத்து சாந்தி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.

    இந்தநிலையில் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்றிருந்தபோது சாந்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தர்மர்(வயது70). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×