search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl death"

    இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த புள்ளமங்கலம் ஊராட்சி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது27). தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (22). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. கணவர் ஸ்ரீகாந்த் கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக கோட்டூர் 3-ம் சேத்தியில் வசிக்கும் கோகிலாவின் பெரியப்பா வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ஸ்ரீகாந்த், கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். அவர்களை அடிக்கடி சமாதானம் செய்து வந்தோம். இந்தநிலையில் கோகிலா இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் கோகிலா மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் வடபாதிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையை அடுத்த வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். டெம்போ டிரைவர். இவரது மனைவி ரதி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரதி பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக கணவரிடம் கேட்டார். ஆனால் மணிகண்டன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த ரதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரதி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை தங்க பாண்டியன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் சாவிற்கு மருமகனே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

    மாமனார் தன்மீது போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மணிகண்டன் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் நேற்று மாலை வக்கீல் ஒருவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் போலீசாரிடம் தனது மனைவி சாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 7 வருடம் முடியாததால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    பலியான ரதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் ரதியின் சாவிற்கான காரணங்கள் தெரியவரும்.
    செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலன் காட்டான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது40). டிரைவர். இவரது மனைவி ஆனந்த ஈஸ்வரி (36). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி ஆனந்த ஈஸ்வரியை பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கடந்த 6-ந்தேதி வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தந்தை பெரியசாமி, ஆனந்த ஈஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். புகாரில் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்த ஈஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
    ×