என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young girl death"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தை அடுத்த புள்ளமங்கலம் ஊராட்சி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது27). தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (22). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. கணவர் ஸ்ரீகாந்த் கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கோகிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோட்டூர் 3-ம் சேத்தியில் வசிக்கும் கோகிலாவின் பெரியப்பா வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ஸ்ரீகாந்த், கோகிலாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். அவர்களை அடிக்கடி சமாதானம் செய்து வந்தோம். இந்தநிலையில் கோகிலா இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் கோகிலா மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் வடபாதிமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்