search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife condemn"

    பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    பாகூர் அருகே குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள முகமது உசேன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பாத்திமா கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த முகமது உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×