என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vijayakanth birthday"
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 4 ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செவ்வை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்றார்.
பொருளாளர் தனசேகரன், துணை செயலாளர்கள் தங்கவேல், பேபி, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும் போது, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாள், கட்சி தொடக்க நாள், திருப்பூரில் கட்சி மாநாடு நடக்கிறது. விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பகுதி, ஒன்றிய, மாநகர் பகுதிகளில் கட்சி ஏற்றி பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் நடராஜ், ராஜி, சேகர், ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், கோபால்சாமி, கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர் செல்வம், திருஞானம், பிரபா, பகுதி துணை செயலாளர் சண்முகம், ஜேமஸ்குமார், இன்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமார் நன்றி கூறினார். #dmdk
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்