search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்- நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    X

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்- நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #dmdk

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 4 ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செவ்வை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்றார்.

    பொருளாளர் தனசேகரன், துணை செயலாளர்கள் தங்கவேல், பேபி, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசும் போது, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாள், கட்சி தொடக்க நாள், திருப்பூரில் கட்சி மாநாடு நடக்கிறது. விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பகுதி, ஒன்றிய, மாநகர் பகுதிகளில் கட்சி ஏற்றி பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவாக நியமிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் நடராஜ், ராஜி, சேகர், ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், கோபால்சாமி, கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர் செல்வம், திருஞானம், பிரபா, பகுதி துணை செயலாளர் சண்முகம், ஜேமஸ்குமார், இன்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமார் நன்றி கூறினார். #dmdk

    Next Story
    ×