என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vellakoil"
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 28). இவர் கடந்த 5 ஆண்டுகளாக முத்தூரில் பழைய கார் விற்பனை நடத்தி வருகிறார்.
நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தார். மதியம் மின் கட்டணம் செலுத்த சென்றார். மின் கட்டணம் செலுத்திய பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.64 ஆயிரத்து 500 திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் வெள்ளகோவிலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வந்தனர். போலீசாரை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். ஆனால் தப்பினர்.
இது குறித்து முத்தூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ரூ.64 ஆயிரத்து 500 மற்றும் 2 லேப்- டாப்புகள் இருந்தது.
விசாரணையில் முத்தூரில் ராஜேஸ்குமார் நடத்தி வரும் கடையில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பணத்தையும், லேப்- டாப்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஈரோடு லட்சுமி நகர் வெண்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 19), நோயல் எபினேஷ் (18), மகேஸ்வரன் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
கடை உரிமையாளர் ராஜேஸ்குமார் இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம் பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (38). இரு சக்கர வாகன மெக்கானிக்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நேற்று காலை குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு கம்பியால் நெம்பி திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், வளையல், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருட்டு போய் இருந்தது.
இதனால் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 58). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
பழைய பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இறந்தார். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்