search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandalur zoo"

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளம் வழியாக நேரடி ஒளிப்பரப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. #EdappadiPalaniswami #vandalurzoo
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 12.10.2017 மற்றும் 16.08.2018 ஆகிய நாட்களில் நேரில் வந்து புதியதாகப் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்

    அதோடு அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.10.85 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ.1.80 கோடியிலும், சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவில் ரூ.1.07 கோடி தொகையில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார்.



    10.01.2018 தேதி முதல் பூங்காவில் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு மற்றும் சுற்றிப்பார்க்கும் வாகனங்களில் பயணச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக www. aazp.in மற்றும் www.vandalurzoo.com என இரண்டு இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    602 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது இந்தியாவில் உள்ள பூங்காக்களில் பெரிய பூங்காவாகும். இப்பூங்காவிற்கு ஒவ்வொரு வருடமும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர்.

    உயிர்ப்பன்மை, அழிநிலை விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பூங்காவின் பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிய பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் ‘சிறப்பு மையம்’ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    170 இனங்களைச் சார்ந்த பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையைச் சார்ந்த 2142 அடைப்பிட விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் பற்றி அறிந்துகொள்ள www.aazoopark.gov.in எனும் நேரடி ஒளிப்பரப்பு வசதி இணையதளம் வழியாக செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #vandalurzoo
    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலியை அதிகாரிகள் தீவிர முயற்சிக்குப் பிறகு பிடித்தனர். #HyenaEscaped #VandalurZoo
    சென்னை:

    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 4 கோடிட்ட கழுதைப்புலிகளில் ஒன்று நேற்று திடீரென காணாமல் போய்விட்டது. மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த புலி நேற்று மாலை மாயமானது. அதை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பூங்கா வளாகத்தை விட்டு கழுதைப்புலி வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் செவ்வாய்க்கிழமை காலைக்குள் பிடித்துவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். எனினும் பூங்காவை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தீவிர முயற்சிக்குப் பிறகு, பூங்கா வளாகத்தில் சுற்றித்திரிந்த கழுதைப்புலியை அதிகாரிகள் இன்று காலை பிடித்து கூண்டில் அடைத்தனர். #HyenaEscaped #VandalurZoo
    ×