search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் உயிரியல் பூங்காவை தெரிந்து கொள்ள இணைய தளம்
    X

    வண்டலூர் உயிரியல் பூங்காவை தெரிந்து கொள்ள இணைய தளம்

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளம் வழியாக நேரடி ஒளிப்பரப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. #EdappadiPalaniswami #vandalurzoo
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 12.10.2017 மற்றும் 16.08.2018 ஆகிய நாட்களில் நேரில் வந்து புதியதாகப் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்

    அதோடு அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.10.85 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், கிண்டி சிறுவர் பூங்காவில் ரூ.1.80 கோடியிலும், சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவில் ரூ.1.07 கோடி தொகையில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தார்.



    10.01.2018 தேதி முதல் பூங்காவில் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு மற்றும் சுற்றிப்பார்க்கும் வாகனங்களில் பயணச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக www. aazp.in மற்றும் www.vandalurzoo.com என இரண்டு இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    602 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது இந்தியாவில் உள்ள பூங்காக்களில் பெரிய பூங்காவாகும். இப்பூங்காவிற்கு ஒவ்வொரு வருடமும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர்.

    உயிர்ப்பன்மை, அழிநிலை விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பூங்காவின் பரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிய பூங்காவாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் ‘சிறப்பு மையம்’ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    170 இனங்களைச் சார்ந்த பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையைச் சார்ந்த 2142 அடைப்பிட விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் பற்றி அறிந்துகொள்ள www.aazoopark.gov.in எனும் நேரடி ஒளிப்பரப்பு வசதி இணையதளம் வழியாக செய்யப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #vandalurzoo
    Next Story
    ×