search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United States"

    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, அமெரிக்காவில் இன்று நடைபெற இருக்கும் பேஸ்பால் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். #RohitSharma #SeattleMariners

    வாஷிங்டன்:

    ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ர சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 264 ரன்களே ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

    முன்னணி கிரிக்கெட் வீரரான இவர், தற்போது பேஸ்பால் வீரராக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். இன்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற இருக்கும் சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.



    இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொள்ளும் அவர் பந்தை முதலாவதாக (பர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த கவுரவத்தை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். #RohitSharma #SeattleMariners
    ×