search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turkey accident"

    துருக்கியில் இன்று அதிவேக ரெயில், மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #TurkeyTrainCrashes
    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரெயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் அதிவேக ரெயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியது.  ஒரு பெட்டி நடைமேம்பாலத்தின் மீது மோதி நொறுங்கியது. இதனால் இரும்பினால் அமைக்கப்பட்ட அந்த மேம்பாலமும் உடைந்தது.


    விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்காரா-கொன்யா அதிவேக ரெயில் பாதை 2011ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 2014ல் அங்காராவையும் இஸ்தான்புல் நகரையும் இணைக்கும் அதிவேக பாதை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyTrainCrashes
    கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். #Nineteenkilled in #migrantvehiclecrash #Turkeymigrantvehiclecrash
    இஸ்தான்புல்:

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

    பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

    மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கடல்மார்க்கம் தவிர சாலை வழியாகவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளான நார்வே, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் அடைய நூற்றுக்கணக்கான குடியேறிகள் தினந்தோறும் சென்றவண்ணம் உள்ளனர்.


    அவ்வகையில், கிரீஸ் நாட்டுக்கு அடைக்கலம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிவந்த லாரி துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் இன்று கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

    மேற்கு துருக்கியில் உள்ள இஸ்மிர் விமான நிலையம் வழியாக சென்ற லாரி கடுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஆழமான கால்வாய்க்குள் விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உடனடி விபரம் ஏதும் தெரியவில்லை என்றும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Nineteenkilled in #migrantvehiclecrash  #Turkeymigrantvehiclecrash
    ×