search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Karthigai Deepam"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பங்கேற்கவும், மேலும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை, தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடியேற்றத்தை அடுத்து கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நாளை மறுநாள் (10-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந்தேதி பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று தீபத் திருவிழாவை முன்னிட்டு எல்லை தெய்வமான துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் துர்க்கையம்மன் உற்சவமூர்த்தி பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர இசையுடன் மேளதாளம் முழங்க பெட்ரோமாஸ் விளக்குகளுடன் நடைபெற்ற அம்மன் பிரகார உலா பக்தர்கள் மனதைக் கவர்ந்தது.

    முன்னதாக கோவில் சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பல்லக்கில் வலம் வந்தஅம்மனை வணங்கி மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர்.

    இதையொட்டி ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி, டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் கோவில் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் சாமி உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. விழா நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வழக்கமாக 7-ம் நாள் விழாவன்று கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்திற்குள்ளே உற்சவ உலா நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று உள்ளூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று எல்லை தெய்வங்கள் உற்சவ நிகழச்சிகள் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கொடியேற்றத்தன்றும், 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளதால் அந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    மேலும் 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதனை தவிர்த்து மற்ற விழா நாட்களில் தினமும் உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி சீட்டு வழங்கும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வழங்கி அனுமதி சீட்டு பெற்று சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) மேற்கண்ட 4 அலுவலகங்களிலும் அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்குகிறது.

    காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மனின் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர், 8-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 9-ந்தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதிமுன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 10-ந்தேதி காலை 6.30 மணிமுதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற கூடிய விநாயகர், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமாகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    அண்ணாமலை உச்சியில் ஜோதி வடிவமாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுப்பதால், கோவில் மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், மறுநாள் அதிகாலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வு நடைபெறும்.

    இதையடுத்து அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பஉற்சவம் 20-ந்தேதி தொடங்குகிறது. பின்னர் 23-ந்தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா நிறைவு பெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் மற்றும் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவம், ஆகம விதி களின்படி கோவில் வளாகத்தில் கடந்தாண்டை போல் இந்தாண்டு நடைபெறும்.

    அதேபோல், மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோவில் வளாகத்தில் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமிகளின் உலா நடைபெறும்.

    மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய 19-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அய்யங்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும்.

    தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படாது.

    ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை. பவுர்ணமி மற்றும் மகா தீபத் திருநாள் என 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    அவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். www.arunacha leswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இலவச தரிசனத்துக்கான முன் பதிவு இன்று தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கான அனுமதி சீட்டு, சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படும். தீபத் திருவிழா நாட்களில் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி (நாளை) முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.

    அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.

    இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மகாதீப திருவிழா நடப்பதால் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்களை தடை செய்யக்கூடாது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
    வேலூர் கோட்ட இந்து முன்னணி சார்பாக ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி கோட்ட, மண்டல, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் நடந்தது. நகர தலைவர் நாகராஜன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் வரும் 19-ந்தேதி திருவண்ணாமலை மகாதீப திருவிழா நடப்பதால் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்களை தடை செய்யக்கூடாது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். திருவிழா வெகு சிறப்பாக நடத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் மகேஷ், கோட்ட தலைவர் ராஜேஷ், கோட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.

    பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.

    மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் மதுரையை சேர்ந்த அன்னை மீனாட்சி உழவார பணி குழு மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
    ×